உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் பலரும், கதை இத்துடன் முடிவதால் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு இல்லையென்றே கருதினார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்கான க்ளைமாக்ஸ் காட்சியையும் தான் உருவாக்கி விட்டதாகவும் கூறி ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-3க்கான க்ளைமாக்ஸை உருவாக்கிவிட்டேன் அதை மோகன்லாலிடமும், தயாரிப்பாளரிடமும் அதை கூறியபோது அவர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனார்கள். அதேசமயம் இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் நடக்கும்.. அதற்குள் இன்னும் பல விஷயங்களை படத்திற்காக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.