புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தமிழ் இயக்குனரான ஷங்கர். பாகுபலி படங்களுக்குப் பிறகு அவருக்குப் போட்டியாக தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியும் வந்துவிட்டார். தன்னுடைய அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் ராஜமவுலி.
தமிழ் நடிகர்கள் யாரும் இன்னும் பான்-இந்தியா அளவிற்கு வளராத காரணத்தால் இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு ஹீரோவான ராம் சரணுடன் இணைய முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. தன் மகன் ராம் சரண் அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருப்பது அப்பா சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
“கலைகளின் மாஸ்டர், எல்லைகளைக் கடந்து, தொலைநோக்குடன் செயல்படுவதில் முன்னோடி இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைவது சிலிர்ப்பாக உள்ளது. இந்திய சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என மகன் ராம் சரணை வாழ்த்தியுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.