ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படங்கள் தங்களது எல்லைகளைக் கடந்து வட இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. அதன்பிறகு தற்போது எடுக்கப்பட்டு வரும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் தென்னிந்திய வெளியீடாக மட்டுமல்லாமல் வட இந்திய வெளியீடாகவும் அமைந்து 'பான் இந்தியா' படங்களாக மாறியுள்ளது.
அந்த விதத்தில் வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தான் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அந்த இடத்தை தற்போது தெலுங்குப் படங்கள் கைப்பற்றிவிட்டது.
ஜுலை 2ல் 'மேஜர்', ஜுலை 16ல் 'கேஜிஎப் 2', ஜுலை 30ல் 'ராதே ஷ்யாம்', ஆகஸ்ட் 13ல் 'புஷ்பா', செப்டம்பர் 9ல் 'லைகர்', அக்டோபர் 13ல் 'ஆர்ஆர்ஆர்' என இந்தப் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாக உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது தமிழ்த் திரையுலகத்திற்கு வருத்தமான ஒரு விஷயம்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் பான் இந்தியா படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் வட இந்தியாவில் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்குத் திரையுலகத்துடன் போட்டி போடும் அளவில் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் போட்டி போட்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.