பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சமீபகாலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த போதை மாபியா தொடர்பாக கடந்த மாதம் ஜாபர் சாதிக் என்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் இரவு நேரத்தில் சில போதை இளைஞர்கள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்திவேல், தானும் இது போன்று போதை ஆசாமிகளில் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, சில போதை ஆசாமிகள் தன்னிடம் வழி மறித்து வம்பு இழுத்து தாக்க முயற்சித்ததாகவும் அதே சமயம் அந்த நேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் காவல்துறை இந்த போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.