உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் எட்டு மாதங்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்பதே அதற்குக் காரணம் என திரையுலகில் தெரிவித்தார்கள்.
அதனால், 'மாஸ்டர்' படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வைத்துவிட வேண்டும் என முடிவு செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். ஜனவரி 13ம் தேதியன்று 'மாஸ்டர்' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் வெளியிட ஒரு சாரார் முயற்சித்தார்கள்.
ஆனால், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தையும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இதனிடையே, 'மாஸ்டர்' படம் மட்டுமே தனியாக வெளியாக வேண்டும் என அப்படத்தை வாங்கியுள்ளவர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம். அதனால், எப்படியாவது 'ஈஸ்வரன்' படத்தை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
சிம்பு நடித்து வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பஞ்சாயத்து பிரச்சினையை இப்போது தூசி தட்டி எடுத்துள்ளார்களாம். இதுதொடர்பாக ஏற்கனவே டி.ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒரு எச்சரிக்கை அனுப்பியது. அதாவது, ஏஏஏ பட விவகாரத்தை காரணம் காட்டி ஈஸ்வரன் படத்தை வெளிவர விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது. இதை வன்மையாக கண்டிகிறோம். சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வரும் என கூறப்பட்டிருந்தது. நாளை இந்த விவகாரம் பரபரப்பாகும் எனத் தெரிகிறது.
கொரோனாவுக்குப் பிறகு மீண்டு வர நினைக்கும் சினிமாவை இப்படி சினிமாவில் உள்ளவர்களே கெடுக்கிறார்களே என ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.