ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. கடத்தல், பாலியல் தொல்லை ஆகியவை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு எதிராக மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கம் போராடி வருகிறது.
சமீபத்தில் இதன் நிர்வாகிகளான ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க மலையாள நடிகர் சங்கம் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜெயசங்கரன் நம்பியார் அடங்கிய டிவிஷன் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.