போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் (AMMA) தற்போது நடிகர் திலீப் பிரச்சனையால் கலகலத்து போயுள்ளது.. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்ற அவரை எப்படி மீண்டும் சங்கத்தில் சேர்க்கலாம் என ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன்,கீத்து மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இந்தநிலையில் நடிகை அனுமோல் என்பவரும் நடிகர்சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
இவர் மலையாளி என்றாலும் அறிமுகமானது தமிழில் தான். தமிழில் திலகர் மற்றும் ஒருநாள் இரவில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பின் மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகியபின் தற்போது சுதந்திரமாக உணர்வதாக கூறினாலும் இவர் விலகியதற்கான காரணம் திலீப் பிரச்சனை இல்லையாம்.
"நடிகர் சங்கத்தில் இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் இருந்து உத்தரவுகள் வந்தன. நான் யாருடன் நடிக்க விரும்பவில்லையோ, யார் படத்தில் பணியாற்ற விரும்பவில்லையா அவர்களுடன் இணைந்து வேலைபார்க்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அதனால்தான் சங்கத்தில் இருந்து விலகியுள்ளேன். இப்போது நான் நடிகர்சங்கத்திலும் இல்லை.. அதற்கு எதிராக குரல்கொடுத்து வரும் சினிமா பெண்கள் நல அமைப்பிலும் சேர விரும்பவில்லை" என காரணம் கூறியுள்ளார் அனுமோல்.