போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி உள்ள அண்ணாத்துரை படம் இன்று வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி பிலிம் கார்போரேஷின் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி மற்றும் ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோயினாக நடித்திருப்பவர் டயனா சம்பிகா. படத்தில் நடித்திருப்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம். நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக தேர்ந்து எடுத்த பாத்திமா விஜய் ஆண்டனிக்கும், எனக்கு நடிப்பில் ஏற்படும் சிறு சந்தேகங்களை கூட பொறுமையாக விளக்கி சொல்லும் விஜய் ஆண்டனியையும் வாழ் நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்.
இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தார். ஸ்ரீதேவி போல ஸ்டைலாகவும், நயன்தாரா போல திரை ஆளுமையுடனும், த்ரிஷா போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை, அது நிச்சயம் நிறைவேறும் . என்கிறார் டயானா சம்பிகா.