ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒருநாள்கூத்து, பொதுவாக என்மனசு தங்கம் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்னும் தமிழில் ஒரு நிலையான இடத்தை அவர் பிடிக்கவில்லை.
இருப்பினும் தற்போது தெலுங்கில், ஸ்ரீவிஷ்ணு நாயகனாக நடிக்கும் மென்டல் மதிலோ என்ற படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இப்படம் நாளை(நவ., 24) ரிலீஸாகிறது.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் ஸ்வெட்சா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரொம்ப சுந்திரமான பெண்ணின் வேடம். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஸ்ரீ விஷ்ணுவுடன் அறிமுகம் இல்லாததால் சில தினங்கள் அமைதியாக இருந்தேன். அதன்பிறகு அவரிடம் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கிவிட்டேன்.
நான் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண்ணாக இருந்தபோதும் எனக்கு தெலுங்கு ஓரளவு பேசத் தெரியும். எப்படியென்றால், எனது அப்பா தமிழர் என்றபோதும் அம்மா ஆந்திராவைச் சேர்ந்தவர். அதனால் தெலுங்குப்பட யூனிட்டில் தெலுங்கிலேயே பேசி வருகிறேன். எதிர்காலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கப்போவதாக சொல்கிறார்.