'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
சினிமா-சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கல்யாணி. பின்னர் சில படங்களில் கதாநாயகியாகவும், சீரியல்களில் டைட்டீல் கேரக்டர்களிலும் நடித்து வந்த கல்யாணி, கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலாகி விட்டவர், தற்போது மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக கல்யாணி அளித்த பேட்டி...
திருமணத்திற்கு பிறகு நான் பெங்களூரில் செட்டிலாகி விட்டேன் என்றாலும் சின்னத்திரையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அதை நான் எனது கணவர் ரோஹித்திடம் சொன்னபோது அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உன் விருப்பம் போல் செயல்படு என்று சுதந்திரம் கொடுத்து விட்டார். அதையடுத்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சீனியர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகிவிட்டேன். ஆக, நான் மீண்டும் மீடியாவுக்கு வருவதற்கு என் கணவர் தான் காரணம்.
ஏற்கனவே பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் உள்பட பல சீரியல்களில் நான் லீடு ரோலில் நடித்திருப்பதால், தொடர்ந்து நல்ல கதபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக நெகடீவ் அல்லாத பாசிட்டீவ் வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். காரணம், நெகடீவ் ரோலில் நடித்தால் நேயர்கள் நம்மை அந்தமாதிரியான மனநிலையுடன் தான் பார்க்கிறார்கள். அதனால் நெகடிவ் இமேஜ் என்மீது விழ நான் விரும்பவில்லை என்று கூறும் கல்யாணி, பாசிட்டிவ் வேடங்களில் சில சீரியல்களில் நடிப்பது குறித்து பேசிவருவதாக சொல்கிறார்.