போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் நாட்டின் கிராமத்து விளையாட்டான கில்லி, பம்பரம், கோலியை மையமாக வைத்து ஒரு முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்துள்ளார்கள். வேலைக்காக மலேசியா சென்ற கிராமத்து இளைஞர்கள் சிலரை அங்கு செட்டிலான ஒருத்தன் கிண்டல் செய்து வம்புக்கு இழுக்கிறான். எனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு எதுவுமே தெரியாது என்கிறான். அதற்கு இவர்கள் எங்களுக்கு கில்லி, பம்பரம், கோலி விளையாடத் தெரியும் என்கிறார்கள். அதிர்ச்சியாகும் வில்லன் அந்த விளையாட்டுகளில் என்னை ஜெயித்துவிட்டால் உங்களுக்கு நான் அடிமை என்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் வில்லனை எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ், தீப்தி ஷெட்டி, சந்தோஷ்குமார் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நாககிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.மனோகரன் தயாரித்து இயக்கி உள்ளார். "படத்தில் காதல் எதுவும் கிடையாது. இளைஞர்களின் போராட்டத்தையும், நம் கிராமகலாச்சரத்தையும் மலேசிய மண்ணில் பதிய வைக்கிற முயற்சி" என்கிறார் இயக்குனர் மனோஹரன்.