'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்துக்கு அடிமேல் அடி விழுவதால் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. சற்குணம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவான டோரா படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக். இப்படத்தில் நயன்தாரா நடிப்பதால் படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்துவிடலாம் என்று நினைத்தனர். தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கியது அதற்கு மிகப்பெரிய தடையாகிவிட்டது.
டோரா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கை குழு வன்முறை காட்சிகள் மற்றும் மூடநம்பிக்கை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கியது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். மார்ச் 31-ம் தேதி ரிலீஸ் என்று தேதி குறித்து விட்டதால், ரிவைசிங் சென்றால் தாமதமாகும் என்பதால் ஏ சான்றிதழோடு டோரா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
தயாரிப்பாளரின் இந்த முடிவு, டோரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய ஆரா சினிமாஸ் நிறுவனத்துக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல ஏ சான்றிதழ் பெற்றதால் டோரா படத்தின் விலையைக் குறைக்கும்படியும் சற்குணம் மற்றும் ஜபக்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.