கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்துக்கு அடிமேல் அடி விழுவதால் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. சற்குணம் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவான டோரா படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக். இப்படத்தில் நயன்தாரா நடிப்பதால் படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்துவிடலாம் என்று நினைத்தனர். தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கியது அதற்கு மிகப்பெரிய தடையாகிவிட்டது.
டோரா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கை குழு வன்முறை காட்சிகள் மற்றும் மூடநம்பிக்கை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கியது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். மார்ச் 31-ம் தேதி ரிலீஸ் என்று தேதி குறித்து விட்டதால், ரிவைசிங் சென்றால் தாமதமாகும் என்பதால் ஏ சான்றிதழோடு டோரா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
தயாரிப்பாளரின் இந்த முடிவு, டோரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய ஆரா சினிமாஸ் நிறுவனத்துக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல ஏ சான்றிதழ் பெற்றதால் டோரா படத்தின் விலையைக் குறைக்கும்படியும் சற்குணம் மற்றும் ஜபக்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.