‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவர்கள், ஏன் சிறு குழந்தைகள் கூட, படத்தில் இடம்பெறும் புலியை வேட்டையாடும் அவரது பிரத்யேக ஸ்டைல் ஒன்றை அடிக்கடி செய்துகாட்டும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவை நிறைத்து வருகின்றன..
அப்படித்தான் ஆழப்புழாவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோகன்லால் வேல் எறிந்து புலியை கொள்வது போல 'புலி முருகன்' பாணியில் கையில் இருந்த இரும்புக்கம்பியை புலியை நோக்கி வீசுவதுபோல வீசியுள்ளான்.. ஆனால் அவன் வைத்த குறி, அந்த இரும்புக்கம்பி அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரோஷன் மேரி என்கிற 9 வயது சிறுமியின் கண்களை தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.