போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் துரத்தியடிக்கிறார்கள்.
இதனால் இனி கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தியேட்டர் கேன்டீன்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தியேட்டர் அதிபர் சங்கமும் எடுக்க இருக்கிறது. சங்கத்தின் முடிவுக்கு முன்பே மதுரை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு குளிர்பானங்களை விற்கத் தொடங்கி விட்டனர். விரைவில் கூட இருக்கும் தியேட்டர் அதிகபர்கள் சங்க செயற்குழுவில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.