கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் துரத்தியடிக்கிறார்கள்.
இதனால் இனி கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தியேட்டர் கேன்டீன்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தியேட்டர் அதிபர் சங்கமும் எடுக்க இருக்கிறது. சங்கத்தின் முடிவுக்கு முன்பே மதுரை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு குளிர்பானங்களை விற்கத் தொடங்கி விட்டனர். விரைவில் கூட இருக்கும் தியேட்டர் அதிகபர்கள் சங்க செயற்குழுவில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.