‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருடி, வீரமும் ஈரமும் உள்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் தன்யா. கேரளாவில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 130 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கணவருடன் கைது செய்யப்பட்டிருப்பது கேரள திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தன்யாவுக்கும் ஜான் ஜேக்கப் என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஜான் ஜேக்கப் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு தன்யாவை தனது நிறுவனத்தின் இயக்குனராக நியமித்தார்.
திருவனந்தபுரத்தில் பல குடியிருப்புகளை கட்டி வரும் ஜான் ஜேக்கப், வீடு தருவதாக விளம்பரம் செய்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளார். அதிக வட்டி தருவாக கூறி பல நிறுவனங்களிடம் 30 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி யாருக்கும் வீடு ஓதுக்கி கொடுக்கவில்லை. கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் தலைமறைவாகிவிட்டார்கள்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து ஜான் ஜேக்கப், தன்யா இருவர் மீதும் பணமோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர். இந்தியா முழுவதும் அலசியதில் பல ஊர்களில் பல பெயர்களில் தங்கியிருந்த ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் கைது செய்யப்பட்டுவிட்டதாக கேரள போலீஸ் அறிவித்துள்ளது. இது மலையாள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.