ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவை சேர்ந்த அனைவரும் எதிர்பார்த்தபடி மலையாள சினிமாவில் இருந்து முதன்முறையாக 150 கோடி கிளப்பிற்குள் நுழைந்துள்ளது மோகன்லால் நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'புலி முருகன்' படம். இதுநாள் வரை வியாபார ரீதியாக ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே சுழன்று வந்த மலையாள சினிமாவை மிகப்பெரிய உயரத்திற்கு இட்டுச்சென்றதன் மூலம் தனக்கு பின்னால் வருபவர்களுக்கு ஒரு புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் மோகன்லால்.
சுமார் முப்பது கோடி ரூபாயில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப்படம் தான் மலையாள சினிமாவில் அதிகம் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படமும் கூட... தமிழில் இப்போது வந்த சிவகார்த்திகேயன் படத்திற்கே 25 கோடி செலவு செய்யப்படும் வேளையில், மலையாளத்தில் அதுவும் மோகன்லால் நடித்தாலும் கூட இந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதையே ரிஸ்க் என கூறி பின்வாங்கியவர்கள் பலரும் இன்று இந்த சாதனையை கண்டு வாய்பிளந்து நிற்கிறார்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது தெலுங்கிலும் 'மான்யம் புலி' என்கிற பெயரில் வெளியாகி இன்னும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.