ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில நாட்களாக மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ கர்னல் பதவிக்கு ஆபத்து என்கிற விதமாகவும் அவரிடமிருந்து அந்தப்பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் என்கிற விதமாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. மோகன்லால் தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவியை, தான் கேரளா அரசுக்கு நடித்துக்கொடுத்த விளம்பரம் ஒன்றுக்காக சுயநலமாக பயன்படுத்தினார் என்றும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது தவறான செய்தி என மறுத்துள்ளார் மோகன்லாலின் நண்பரும் இயக்குனரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி.
இந்த செய்தி பழைய செய்தி என்று கூறியுள்ளார் மேஜர் ரவி, இந்த சர்ச்சைக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே மத்திய அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனியும் மோகன்லாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் அதன்பின்னும் இந்த செய்தியை இப்போது புதியது போல சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் என்றால் அது மோகன்லாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்” என விளக்கம் அளித்துள்ளார் மேஜர் ரவி.