ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
கடந்த சில நாட்களாக மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ கர்னல் பதவிக்கு ஆபத்து என்கிற விதமாகவும் அவரிடமிருந்து அந்தப்பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் என்கிற விதமாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது. மோகன்லால் தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவியை, தான் கேரளா அரசுக்கு நடித்துக்கொடுத்த விளம்பரம் ஒன்றுக்காக சுயநலமாக பயன்படுத்தினார் என்றும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது தவறான செய்தி என மறுத்துள்ளார் மோகன்லாலின் நண்பரும் இயக்குனரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி.
இந்த செய்தி பழைய செய்தி என்று கூறியுள்ளார் மேஜர் ரவி, இந்த சர்ச்சைக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே மத்திய அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனியும் மோகன்லாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் அதன்பின்னும் இந்த செய்தியை இப்போது புதியது போல சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் என்றால் அது மோகன்லாலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும்” என விளக்கம் அளித்துள்ளார் மேஜர் ரவி.