‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீஸாக பிருத்விராஜை வைத்து தான் இயக்கிய 'ஊழம்' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்த பட வேலைகளை துவக்கும் முனைப்பில் உள்ளார் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இவரது மனைவி லிண்டா ஒரு கதை எழுதி வருவதாகவும் அந்தப்படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.. அது உண்மை தான் என்றாலும் தற்போதைக்கு அது நடக்கும் சூழல் இல்லை.. கொஞ்ச நாளாகும் என்றே தெரிகிறது.. இதற்குமுன் அவர் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. அதை ஜீத்து ஜோசப்பும் மறுக்கவில்லை.
ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படத்திற்கு தீவிரமாக கதை எழுதி வருகிறாராம் ஜீத்து ஜோசப்.. படத்தின் பெயர் லட்சியம்.. ஆனால் இந்தப்படத்திற்கு கதை மட்டுமே எழுதுகிறார் ஜீத்து ஜோசப்.. படத்தை இயக்குவது அவரது நண்பரான அஸார் கான் என்கிற இயக்குனர்.. இந்தப்படத்தின் நாயகர்களாக பிஜூ மேனன் மற்றும் இந்திரஜித் இருவரும் நடிக்கிறார்கள்.. கதாநாயகியாக 'நெடுஞ்சாலை' புகழ் ஷிவதா நடிக்கிறார்.