‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இங்கே விஜய், அஜித் ரசிகர்கள் நேரிலும், சோசியல் மீடியாவிலும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மலையாள முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களிடையே அவ்வப்போது வார்த்தை யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அந்த ஹீரோக்களின் படங்கள் தனித்தனியாக வெளியாகும்போது பெரிய அளவில் வெடிப்பதில்லை. அதே சமயம், இரண்டு மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் வார்த்தை மோதல்களால் சோஷியல் மீடியாவே ரணகளமாகி விடுகிறது. தங்களுக்கு பிடிக்காத நடிகர்களின் படங்களையும், நடிகர்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித்தீர்க்கும் மோசமான நிகழ்வுகளும் அரங்கேறுகிறது.
சமீபத்தில் இது போன்ற தனது ரசிகர்கள் நடந்து கொண்டதால், மிகவும் நொந்து போயிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ். காரணம் கடந்த வாரம் அவர் நடித்த 'ஊழம்' படம் வெளியான அதே நாளில் தான் மோகன்லால், திலீப், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் படங்களும் வெளியாகின. இதில் பிருத்விராஜை உயர்த்தி பேசுவதாக நினைத்துக் கொண்டு மற்ற நடிகர்களின் படங்களை மட்டம் தட்டும் வேலையை சில ரசிகர்கள் செய்துள்ளனர். இது பிருத்விராஜின் கவனத்திற்கு வர, டென்ஷனான பிருத்விராஜ், ”நான் அனைத்து நடிகர்களுடனும் நல்ல நட்பில் இருப்பவன்.
மற்றவர் படங்களை உங்களுக்கு பிடிக்காவிட்டால் தயவு செய்து அவற்றை விமர்சிக்கிறேன் என தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டு, என்னை மற்றவர்கள் முன் தலைகுனியச் செய்து விடாதீர்கள்” என கோபமும், வருத்தமும் கலந்து கோரிக்கை வைத்துள்ளார் பிருத்விராஜ்.