‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யாவும், அகிலும் நாயகன்களாக நடிக்க துவங்கிவிட்டனர் இருப்பினும் நாகார்ஜூனாவிற்கான மவுசு குறையவில்லை. சொக்கடே சின்னி நயன் படத்தில், மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய நாகார்ஜூனா அடுத்து தமிழ், தெலுங்கில் ஊபிரி படத்தில் நடித்தார். தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நாகார்ஜூனா தற்போது ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நாகார்ஜூனா தனது இரண்டு மகன்களின் அடுத்தடுத்த ;படங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சொக்கடே சின்னி நயன் படத்தை இயக்கிய கல்யாண் குமார் இயக்கத்தில் நாகாசைத்ன்யாவும், “மனம்”, சூர்யாவின் “24” போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் அகிலும் நடிக்கவிருப்பதாக நாகார்ஜூனா அறிவித்துள்ளார்.