‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒவ்வொருமுறை ஏதாவது மீடியாவின் நேர்காணலின்போதும் அவர் மறுமணம் செய்துகொள்வது குறித்தும் அவருக்கும் காவ்யா மாதவனுக்குமான நட்பு குறித்தும் தவறாமல் கேள்வி கேட்கப்படுவது வாடிக்கை.. அவரும் இதுநாள் வரை பொறுமையாகவே அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படம் மலையாளத்தில் வெளியானது.. இதை முன்னிட்டு ஒரு பிரபல மலையாள பத்திரிகை ஒன்று அவர்கள் இருவரின் புகைப்படத்தை ஜோடியாக அட்டைப்படத்தில் போட்டு, மீண்டும் திலீப் - காவ்யா மாதவன் திருமண பேச்சை பேட்டியிலும் கிளறியுள்ளது..
அதற்கு பதிலளித்த திலீப் “பொதுவாக மகளின் திருமண முடிவை தந்தைதான் எடுப்பது வழக்கம்.. என் விஷயத்திலோ திருமணம் செய்யவேண்டுமென்றால் அதற்கு என் மகளிடம் தான் அனுமதி கேட்கவேண்டும்” என மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.. இருந்தாலும் விடாப்பிடியாக, காவ்யா மாதவனை மறு திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டதற்கு காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும்” என சூசகமான பதிலையும் சொல்லியுள்ளார் திலீப்..
மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தபின்னரும் கூட அவர்களது மகள் மீனாட்சி தாயுடன் செல்லாமல் தந்தையுடனேயே தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது