ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை அமைத்திருக்கிறார். மூன்று திரையரங்குகளை கொண்ட இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் கடந்த 2014 கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து படங்களை திரையிட்டு வருகிறது.
நேற்று முன் தினம் இந்த தியேட்டரில் இருந்து சுமார் 6.82 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களில் திரையிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் தான் அது. ஆனால் திருடியது யாராக இருக்கும் என்கிற விபரமும் கிடைத்துவிட்டது.. இந்தப்பணம் திருடுபோன பின்னர், அவங்கே பணியில் இருந்த பெங்காலி ஊழியர் ஒருவர் பணிக்கு வராததையும், சாலக்குடியில் உள்ள அவரது இருப்பிடத்திலும் இல்லாததையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவரை பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் கேரள போலீஸார்.