‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள ஆக்சன் ஹீரோ சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'முதுகாவு' படம் இந்தவாரம் வெளியாகியுள்ளது.. இந்தப்படத்தின் கதையோட்டத்திற்கு துல்கர் சல்மான் 'வாய்ஸ்' கொடுத்து சர்ப்ரைஸ் தந்திருந்ததைப்போல, படத்தின் டைட்டில் கார்டு போட துவங்குவதற்கு முன், இந்தப்படம் பிரியதர்ஷன்-மோகன்லால் இருவருக்கும் சமர்ப்பணம் என கார்டு போடப்பட்டது. வழக்கமாக மலையாள சினிமாவில் 'நன்றி' கார்டுகள் என்பவை' இரண்டு நிமிடங்களுக்கு ஆக்கிரமிக்கும் என்பதால் யாருக்காக, எதற்காக நன்றி சொல்லியிருக்கிறார்கள் என ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..
ஆனால் 'முதுகாவ்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சான்ட்ரா தாமஸ், தங்களது சமர்ப்பணம்' குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.. மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் பிரியதர்ஷன் டைரக்சனில் வெளியான 'தேன்மாவின் கொம்பத்து' படத்தில் இடம்பெற்று ரசிகர்களை சென்றடைந்த பிரபலமான வார்த்தைதான் இந்த முதுகாவ்.. இந்தவார்த்தை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த மோகன்லால், ஷோபனா இருவருக்கும் இடையேயான காதல் பரிமாற்றத்திற்கு உதவிய வார்த்தையாம்.
இந்த முதுகாவ் என்கிற வார்த்தையை கேரள மக்களிடம் பிரபலப்படுத்திய பிரியதர்ஷன்-மோகன்லால் இருவரையும் அழைத்து தங்களது படத்தை லாஞ்ச் பண்ணலாம் என நினைத்திருந்தார்களாம்.. ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் போகவே காலத்திற்கும் நிலைத்திருக்கும் விதமாக டைட்டில் கார்டில் இருவருக்கும் சமர்ப்பணம் என சொல்லி தங்களது நன்றியை வெளிப்படுத்திவிட்டார்களாம். (இந்தப்படம் தான் தமிழில் ரஜினி-மீனா நடிக்க 'முத்து' என ரீமேக் ஆனதையும், அதில் ரஜினி சொன்ன 'இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு' என்கிற டயலாக்கையும் ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்