‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடிகர்சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட்.. அதுமட்டுமல்ல பி.ஜே.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. நேற்று மலையாள நடிகர் சலீம்குமார், தான் நடிகர்சங்கத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். “இரண்டு நடிகர்கள் போட்டியிடும் தொகுதியில் ஒருவருக்கு ஆதரவாக மட்டும் பிரச்சாரம் செய்யக்கூடாது.. ஆனால் மோகன்லால் அப்படி செய்து விதியை மீறிவிட்டார் என சலீம்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது சக நடிகர்களுக்குள் மோதலை உண்டாக்கும் என்பதால் தான் சங்கத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்..
அது குறித்த தனது விளக்கத்தை தெரியப்படுத்தியுள்ளார் இன்னொசன்ட்.. “நடிகர்சங்கம் யாருக்கும் அப்படி ஒரு தடையையோ விதியையோ விதிக்கவில்லை. அரசியலில் ஈடுபடுவதும் மற்றவர்களுக்காக பிரச்சாரம் செய்வதும் அவரவர் ஈடுபாடு.. அதில் நடிகர்சங்கம் குறுக்கிடாது. சலீம்குமார் அனுபவம் வாய்ந்த நடிகர்.. அவர் நடிகர்சங்கத்தில் நீடிக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்.. இன்னும் அவர் எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் தரவில்லை” என பதில் கூறியுள்ளார் இன்னொசன்ட்.