ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நாக சைதன்யா நடித்து வருகின்றார். மேலும் மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாகசைதன்யா மட்டுமல்லாது அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு அதிக தேதிகள் ஒதுக்க வேண்டி இருந்ததால் இப்படத்திலிருந்து கார்த்தியும் துல்கர் சல்மானும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு பதில் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் ராணாவிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.