ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
தற்போது மோகன்லால் ஒரே நேரத்தில் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, அதில் ஒன்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். படத்தின் பெயர் 'மண்மந்தா'.. சந்திரசேகர் ஏலெட்டி என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மோகன்லால் ஸ்பெஷலாக கருதுகிறார். காரணம் கிட்டத்தட்ட 21 வருடங்கள் கழித்து அவர் தெலுங்கில் நடிப்பதுதான் காரணம். அதுமட்டுமல்ல, இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டி, மலையாளத்தின் பிலிம் மேக்கிங் பாணியில் அனைத்து காட்சிகளுக்கும் டீடெய்ல் கொடுத்துள்ளதும் அவரை சந்தோஷப்படுத்தியிருக்கிறது..
இந்தப்படத்தில் மோகன்லால் தவிர இன்னொரு முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு நடிப்பதாக சொல்லப்பட்டு வந்ததே தவிர, இதுநாள் வரை அதை உறுதிசெய்யும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால் சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கேரளா கிளம்புவதற்கு முன், தன்னுடன் படத்தில் நடித்த ஜெகபதிபாபுவுடன் செல்பி எடுத்துக்கொண்டதுடன், அதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் மோகன்லால். இதன்மூலம் ஜெகபதிபாபுவும் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் கதையின் நாயகிகளாக கௌதமி மற்றும் ஊர்வசி இருவரும் நடிக்கிறார்கள்.