ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
மலையாள நடிகையான காவ்யா மாதவன், தமிழில் 'காசி', 'என் மன வானில்', 'சாது மிரண்டா' என சில படங்களில் தான் நடித்துள்ளார். என்றாலும் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை. மற்ற மலையாள நடிகைகளைப்போன்று பிற மொழிகளில் அதிகம் நடித்திராத காவ்யா மாதவன், மலையாளத்தில் மட்டும் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. 2016 அவருக்கு வெள்ளி விழா ஆண்டு.
1991ம் ஆண்டு பூக்காலம் வரையில் என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதே படத்தில் தான் ஷாலினியின் தங்கை ஷாம்லியும் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காவ்யா, அழகிய ராவண் படத்திலிருந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். தனது 25 வருட சினிமா பயணத்தில் 2 கேரள அரசு விருதுகள், 5 கேரள கிரிட்டிக் விருதுகள், 7 ஏசியா நெட் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கையில் 2009ம் ஆண்டு நிஷால் சந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். 2 ஆண்டுகளிலேயே திருமண வாழ்க்கை கசந்து நாடு திரும்பினார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பிசியான நடிகையாகிவிட்டார். தனது வெள்ளிவிழா ஆண்டு குறித்து காவ்யா மாதவன் குறிப்பிடும்போது "சினிமாவில் 25 ஆண்டுகள் நீடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.