மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு பாலக்காட்டில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் என மூன்று ஏரியாவிலும் மாறி மாறி தனது பங்களிப்பை தந்தவர் கோபாலகிருஷ்ணன். முக்கியமாக இயக்குனர் பிரியதர்ஷனின் ஆஸ்தான துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.
அதுமட்டுமல்ல, தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'சுந்தரா ட்ராவல்ஸ்' படத்தின் ஒரிஜனலான மலையாளம் 'ஈ பறக்கும் தளிக' படத்தின் ஸ்க்ரீன்ப்ளே இவர் எழுதியது தான். மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வந்தனம்' இவரது கைவண்ணத்தில் உருவானதுதான்.. கதாசிரியராக இருந்து ஒருகட்டத்தில் சில படங்களையும் இயக்கினார் கோபாலகிருஷ்ணன். கடந்த 20 வருடங்களாக பாலக்காட்டில் வசித்துவந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் இப்படி திடீரென தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.