'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போகிறபோக்கில் சில தகவல்களை சிலர் சொல்லிவிட்டு போவார்கள்.. ஆனால் அது மூடியிருக்கும் பல திரைகளை தன்னையறியாமல் விலக்கிவிட்டு போகும்.. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் மலையாள இயக்குனர் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது 23 வருடங்களுக்கு முன் தான் இயக்கிய 'மணிச்சித்திரதாழ்' படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அந்தப்படத்தில் ஷோபனாவின் நடிப்பும், கம்பீர குரலும் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தில் ஷோபனா கங்காவாகவும் நாகவல்லியாகவும் (தமிழில் சந்திரமுகி') ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு தேசிய விருதும் மாநில அரசு விருதும் கூட கிடைத்தது.
ஷோபனாவின் இந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்டான பாக்யலட்சுமி என்றுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதில் பாதிதான் உண்மை. ஆம், ஷோபனாவின் கங்கா கதாபாத்திரத்திற்கு பாக்யலட்சுமியும் நாகவல்லி கதாபாத்திரத்திற்கு துர்கா என்பவரும் டப்பிங் பேசியிருந்தனர்.. இந்த துர்கா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனை திருமணம் செய்துகொண்டவர். எண்பதுகளில் ராதா, அம்பிகாவுக்கு தமிழில் டப்பிங் குரல் கொடுத்தவரும் இவர் தான்.
ஆனால் 'மணிச்சித்திரதாழ்' படத்தில் துர்கா டப்பிங் பேசிய விபரம் வெளியே தெரியாமலேயே இருந்ததால், அவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் அங்கீகாரமும் தட்டிப்போனது என்னவோ உண்மை. தற்போது பாசிலின் மனம் திறந்த பேட்டியால் உண்மை வெளிச்சத்திற்கு வர, பலரும் துர்காவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருவதால் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்து வருகிறார் துர்கா.