விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பச்சை மலையாளியான துல்கர் சல்மானை பற்றி இப்படி சொல்கிறீர்களே, இது அடுக்குமா என துல்கர் ரசிகர்கள் கோபத்தில் கல் தூக்க வேண்டாம். விஷயம் நம்பத்தகுந்த இடத்தில் இருந்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு சேனல் பேட்டியின்போது பகிரங்கப்படுத்தியவர் மலையாள நடிகை அனுமோல். யெஸ்.. தமிழில் 'ஒரு நாள் இரவில்' படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தாரே, அதே அனுமோல் தான். அவருக்கு எப்படித்தெரியும் என்றால் மலயாள இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் 'ஞான்' படத்தில் துல்கரின் ஜோடியாக நடித்தபோது நேரிலேயே கண்ணால் கண்டதைத்தான் கூறியுள்ளாராம்.
அப்படியானால் துல்கர் தனது படங்களில் அட்சர சுத்தமாக மலையாளம் பேசுகிறாரே, அது எப்படி என்றால், வழக்கமாக நமது மும்பை நடிகைகள் பாணியில் தனது டயலாக்குகளை மங்கிலீஷில் எழுதி வைத்துக் கொள்வாராம் துல்கர். மலையாளம் படிக்க தெரியாது என்றாலும் கூட டயலாக் டெலிவரியில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அவ்வளவு அழகாக உச்சரிப்பார் துல்கர் என சர்டிபிகேட்டும் கொடுக்கிறார் அனுமோல்.. ஒருவேளை துல்கர் சென்னையிலேயே பல வருடங்கள் தனது படிப்புக்காக தங்கியிருந்தது தான், அவரை மலையாளத்தை வாசிக்கக்கூட விடாமல் செய்துவிட்டதோ என்னவோ..?