பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
பெயர்தான் மலையாள சினிமா.. ஆனால் கமர்ஷியல் படங்கள் அனைத்திலும் பத்தில் இருந்து முப்பது சதவீதமத்திற்கு குறையாமல் தமிழ் வசனங்களோ அல்லது தமிழ் நடிகர்களை பற்றிய காட்சிகளோ இல்லாமல் மலையாள சினிமா வெளியாவதில்லை.. மலையாள படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகத்தெரியும். அந்த வகையில் மலையாள நடிகரும், பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் 'தளபதி' என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறிய சுவாரஸ்யமான நிகழ்வை ஒரு படத்தில் காட்சியாக வைத்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவரும் ஹீரோக்களாக நடித்திருகிறார்கள். இதில் அந்தோணியாக நடித்துள்ள இந்திரஜித் கதைப்படி, ஒரு சினிமா தியேட்டரில் ரஜினி நடித்த 'தளபதி' படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது தியேட்டரிலேயே பிறந்தவராம். அதனால் அவரை பிருத்விராஜ் உட்பட அனைவரும் அவரை தளபதி என்றே அழைப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தளபதி படத்தில் இருந்து ரஜினியின் கிளிப்பிங் கட்சிகளும் பின்னணியில் சிறிது நேரம் காட்டப்படுகிறது. இத்தனைக்கும் அந்தப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தாலும் கூட அவரை பற்றிய பேச்சும் காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.