‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு, அங்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், தென்னிந்தியாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் சென்றது. அப்போது தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஆரம்பத்திலேயே அவர் முன்னணி ஹீரோயின்கள் போன்று சம்பளம் கேட்டதாக அப்போது கூறப்பட்டது.
அதேபோல் அதையடுத்து மாப்பிள்ளை படத்துக்காக தமிழுக்கு வந்தபோது கிட்டத்தட்ட தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்ததால் முன்னணி நடிகை போன்று அவருக்கு சம்பளம் கொடுத்தனர். அதோடு வந்த வேகத்திலேயே அவர் தனுஷ், ஜெயம்ரவி, விஜய் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்ததால் படத்துக்குப்படம் அவரது படக்கூலி எகிறிக்கொண்டேயிருந்தது.
ஆனபோதும், சிம்புவுடன் காதலில் விழுந்தபோது, ஹன்சிகாவின் மவுசு இனிமேல் இறங்கி விடும் என்று அதையடுத்து புக் பண்ணியவர்கள் அவரது சம்பளத்தை குறைத்தனர். ஆனால், சிம்புவுடனான காதல் சில மாதங்களில் காற்றில் பறந்ததால், மறுபடியும் தனது சம்பளத்தை உயர்த்தத் தொடங்கிய ஹன்சிகா, இப்போது மறுபடியும் ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம்.
அந்த வகையில், முன்னணி ஹீரோக்கள் இல்லாமல் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படவாய்ப்புகள் என்றால் டபுள் சம்பளம் கேட்கிறாராம் ஹன்சிகா. அதேசமயம், அந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கரன்சியை அள்ளிக்கொடுக்கும் பட்சத்தில், கால்சீட்டையும், கவர்ச்சியையும் தானும் அள்ளிக்கொடுக்க தயங்குவதில்லையாம் ஹன்சிகா.