ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஸ்வைன் ப்ளூ நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை சோனம் கபூர், தற்போது உடல்நிலை தேறிவருகிறார். பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் படப்பிடிப்பு, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது சோனம் கபூருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், உடனடியாக மேற்சிகிச்சைக்காக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனம் கபூரின் உடல்நிலை குறித்த மாறுபாடான தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. இந்நிலையில், சோனம் கபூரே, தன்னுடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்வைன் ப்ளூ தொற்று இருந்தது உண்மைதான், ஆனால் அது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. தான் உடல்நிலை விரைவாக தேறிவருகிறேன். விரைவில், இயல்புநிலைக்கு திரும்பிவிடுவேன். நான் விரைவில் உடல்நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக சோனம் கபூர் கூறியுள்ளார்.