ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சில வருடங்களுக்கு முன்புவரை கையில் நிறைய படங்களை வைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் தமன்னா. ஏறக்குறைய அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார். தமன்னா தமிழில் பிஸியாக இருந்த அதே நேரம், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். ஒரு கோடி சம்பளத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தமன்னாவின் மார்க்கெட் சரிந்தது. காதல் என்ற வதந்தியும் சேர்ந்து கொண்டு தமிழில் அவரை வளரவிடாமல் செய்துவிட்டது.
சிறு இடைவெளிக்குப் பிறகு வீரம் படத்தில் அஜித் உடன் நடித்தார். வீரம் படம் வெற்றியடைந்தது. அப்படியும் இரண்டாவது இன்னிங்ஸை தமன்னாவினால் தொடங்க முடியவில்லை. இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்துக்கும், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கும் முதலில் தமன்னா பெயரையே பரிசீலித்துள்ளனர். தமன்னா தெலுங்கில் நடித்த ஆறு படங்கள் தொடர்ந்து ப்ளாப்பானதால் அவரை கதாநாயகியாகப் போட வேண்டாம் என்று தடுக்கிறார்களாம் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர்கள். தெலுங்கு டப்பிங் மூலம் பெரிய தொகை கிடைத்து வருவதால் அவர்களின் பேச்சை தட்ட முடியாமல் தமன்னாவை புக் பண்ண தயங்குகிறார்கள்.