பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
கவிதாலயமே! சூரியனின் சுயமே!
நன்னிலத்தில் பிறந்தவரே
நானிலத்தில் பெரியவரே
சின்னவரைப் பெரியவரைச்
சென்றுவாழ்த்தும் மன்னவரே!
நீர்க்குமிழி உலகத்தில்
நிலவாகச் சிரித்தவரே!
மார்கழியில் கார்த்திகையாய்
கமல், ரஜினியைப் படைத்தவரே!
தென்னவரே! தெய்வத்தாயால்
திரைஉலகம் பார்த்தவரே!
தண்ணீர் தண்ணீர் என்று
தமிழ் தாகம் தீர்த்தவரே!
அழகான தேகமே!
அபூர்வ ராகமே!
சுழல்பூமி பெருவரமே
சர்வ சுந்தரமே!
விருதுகள் பலநூறு
விண்மீன்களாய்ப் பெற்றவரே!
இருகோடுகள் போட்ட
எழுத்தாணி வள்ளுவரே!
முடிந்த கதை நீயில்லை
முடியாத தொடர்கதை நீ!
நெடும்புகழ் வானமே எல்லை
நின்மனதிற்கு ஏது எல்லை!
எதிர்நீச்சல் நீ புதுமை அது நீ
புதுப்புது அர்த்தங்கள் நீ
விதி செய்து அச்சமில்லை என்ற
வெற்றிகளின் தகப்பன்நீ
உன் கண்ணாடி கவிதாலய
உயிர்நாடி! தாதா சாகேப்
மன்னவரே! நீ கலை முன்னோடி
கதிரவரே உன் ஆயுள் பலகோடி!
பேராசிரியர் பாடலாசிரியர் - சொற்கோ