'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் நாயகர்களாக நடிக்க தமிழ், தெலுங்கில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இரு மொழிகளில் தயாராகும் படம் என்பதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்தால் படத்திற்கு பிளஸ்ஸாக இருக்கும் என நினைத்து, ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்களாம்.
ஸ்ருதிஹாசன் இதற்கு முன் நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோருடன் நடித்தது இல்லை. எனவே இந்த புது காம்பினேஷன் அமைந்தால் அது படத்திற்கும் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். ஸ்ருதிஹாசன் தற்போது சில ஹிந்திப் படங்களிலும், விஜய் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் சில நாட்கள் மட்டுமே நடித்துள்ளார். அதற்குள் அந்தப் படத்திலிருந்து அவர் நடிக்காமல் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் படத்தில் நடிப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டார் என்று ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனவாம்.
ஆனால், அது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யுடன் நடிக்கும் படத்திற்கும், மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படத்திற்கும் தேதிகளை ஒரே சமயத்தில் ஒதுக்குவதில் ஸ்ருதிஹாசனுக்குப் பிரச்சனையாக இருக்கிறதாம். அவரோ, விஜய் படத்தில் நடிக்கத்தான் ஆர்வமாக இருக்கிறார் என ஆந்திரவாலாக்கள் குற்றம் சாட்டுகிறார்களாம்.