ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி. இந்த நிலையில் நடிகர் மோகன்லாலை சமீபத்தில் சந்தித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இது குறித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, “ஜாம்பவான் நடிகர் மோகன்லாலை சந்தித்ததில் மிகப்பெரிய கௌரவமும் மகிழ்ச்சியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதியும் உடன் இருந்தார். மோகன்லால் பெங்களூர் சென்றபோது இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.