புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் |
துபாய் : 2016 ஆண்டு முதல் தொடர்ச்சியாக அமீரக தமிழர்களின் மேடை நாடக ஆர்வத்தை வளர்த்து வரும் அமீரக குறுநாடக குழுவினர், கொரோனா பீதி சமயத்தில் மேடைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் குறும்படங்கள் இயக்க தங்கள் குழுவினரை ஊக்குவித்தனர்.
2020ம் ஆண்டு முதல் தற்போது நான்காம் ஆண்டாக நடைபெறப்போகும் இவ்விழாவில் பங்கு கொள்ள அமீரகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமும், தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடிகளில் ஒருவருமான நடிகை குட்டி பத்மினி நடுவராக இந்த விழாவிற்கு தலைமையேற்கிறார்.
35க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். படங்கள் திரையிடப்படும் தேர்வு வரிசையை வீடியோ மூலம் வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கபடுத்தினார் நடுவர். பதிவு முறை மூலம் மட்டுமே, 13ம் தேதி குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், ஏப்ரல் 14 காலை படங்களை பார்க்கவும் இயலும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த குறும் படங்கள் வெளியிடப்பட்டு அன்று மாலையே வெற்றியாளர்களுக்கு 12 பிரிவில் 28 வகையான பரிசுகளும், பங்கு கொண்டவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.