'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |
சின்னத்திரை நடிகையான தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ்பாபு என்பவரை காதலித்து வந்தார். தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் மகன் இருப்பதால் சாய் கணேஷ்பாபு வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சாய் கணேஷ்பாபு தற்போது தீபாவுடன் வாழாமல் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் சாய் கணேஷ்பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபா தனது இரண்டாவது திருமணத்திலும் ஏமாந்துவிட்டாரே! என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.