ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'லால் சலாம்'.
இப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் 'திமிறி எழுடா' என்ற பாடல் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர்களான ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரது குரலை 'ஏஐ' மூலம் உருவாக்கி அப்பாடலை அமைத்திருந்தார் ஏஆர் ரகுமான்.
அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்கள். டெக்னாலஜி மூலம் மறைந்தவர்களது குரலையும், உருவத்தையும் பயன்படுத்துவது சரியல்ல என்றும் சொன்னார்கள்.
இதற்கு ஏஆர் ரகுமான், “அவர்களது குடும்பத்தினரிடம் இதற்காக அனுமதி பெற்றோம். மேலும், நல்லதொரு சம்பளமும் அதற்காக அளிக்கப்பட்டுள்ளது. டெக்னாலஜி என்பதை சரியாகப் பயன்படுத்தினால் அது ஆபத்தல்ல, தொல்லையும் அல்ல…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.