Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? - இளையராஜா

06 ஜன, 2024 - 02:56 IST
எழுத்தின் அளவு:
Is-it-a-feat-to-take-a-year-to-put-together-a-song?---Ilayaraja

சென்னை: நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற ஆங்கில நுால், நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதன் முதல் பிரதியை, இளையராஜா பெற்றுக் கொண்டார்.

பின், இளையராஜா பேசியதாவது: நான் சிவபக்தன். ஆனால், நான் எதற்கும் எதிரி அல்ல. என் தந்தை ராமசாமி, வைணவத்தில் தீவிரமாக இருந்தவர். அந்த விட்ட குறையோ, தொட்ட குறையோ இங்கே வந்திருக்கிறேன். திருவாசகத்திற்கு இசையமைத்தது, ஒலிப்பதிவு செய்தது போல, நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைத்து, ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.

மாதம், 30 நாட்களும் எனக்கு முழுமையாக இருக்கும். காலையில் ஒரு பாடல்; மாலையில் ஒரு பாடல். காலை, 7:00 முதல் பகல் 1:00 மணி வரை ஒரு 'கால்ஷீட்' இருக்கும். இப்போதெல்லாம் கால்ஷீட் கிடையாது. இரவு, பகலாக வேலை செய்கின்றனர். ஒரு பாடலுக்கு இசையமைத்து முடிக்க ஆறு மாதங்கள் ஆகின்றன. ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டு, சாதனை படைப்பவர்களும் இருக்கின்றனர். யாரையும் குறை சொல்வதற்காக, இதை சொல்லவில்லை. அவர்களுக்கு வரவில்லை அவ்வளவு தான்.

ஒரே நாளில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். மூன்று நாட்களில் மூன்று திரைப்படங்களுக்கு பின்னணி இசையை முடித்துக் கொடுத்திருக்கிறேன். இப்படி இசையமைத்தவர்கள் உலகில் யாரும் இல்லை. ஓய்வுக்காக பவுர்ணமி தினத்தில், கோடி சுவாமியை தரிசிக்க செல்வேன். கன்னியாகுமரி கடற்கரையில் பித்து பிடித்தது போல திரிந்து கொண்டிருக்கும் மாயமான் என்பவரையும் தரிசிப்பேன்.

பின், திருவண்ணாமலை வந்து, காட்டுப்பாதையில் கிரிவலம் செல்வேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மாதம் தவறாமல் காட்டுப் பாதையில் வெறும் காலில் கிரிவலம் சென்று வருகிறேன். அண்ணாமலை கோவிலில் சிவனை தரிசிக்கும் போது சொல்ல முடியாத உணர்வும், அமைதியும் ஆட்கொள்ளும்.

திருவண்ணாமலை சென்று வந்த பின், ஒரு நாள் வீட்டில் உறங்கி எழுந்ததும், திடீரென, 10 நிமிடங்களில் 10 பாடல்கள் எழுதினேன். அடுத்த நாள், 10 பாடல்கள் எழுதினேன். எனக்குள் வந்தது எழுதினேன். இதுபற்றி புலவர் நமச்சிவாயத்திற்கு போன் செய்து, 20 பாடல்கள் எழுதியதைச் சொன்னேன்.

அவர், 'மாணிக்கவாசகரும், 20 பாடல்கள் தான் எழுதினார். அவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் சேர்த்து திருவெம்பாவை என மார்கழியின், 30 நாட்களும் பாடுகின்றனர். நீங்களும் திருப்பள்ளியெழுச்சி எழுதி விடுங்கள்' என்றார்.

அதன்பின், அடுத்த நாளே திருப்பள்ளியெழுச்சி, 10 பாடல்கள் எழுதினேன். இப்படி நானும் திருவெம்பாவை எழுதினேன். இதை இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு வராமல், இப்போது இல்லத்திற்கு செல்லும் நடிகர்கள்விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு ... இரண்டாவது திருமணம் குறித்த வதந்தி : மீனா கொடுத்த பதிலடி இரண்டாவது திருமணம் குறித்த வதந்தி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in