கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
விக்ரம், பசுபதி மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரஞ்சித். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ரஞ்சித். அந்த சந்திப்பின்போது அம்பேத்கர் தன்னுடைய மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை அவர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். அதோடு, எண்ணமெல்லாம் வண்ணமம்மா என்ற ஒரு கேப்சனையும் கொடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக தெரிந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறார். அதற்கான சந்திப்பே இது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.