'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா |
முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழில் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு வீடுகட்டி கொடுத்தார். விவேக் ஓபராய் நடிப்பதோடு அவ்வப்போது படத் தயாரிப்பிலும் ஈடுபடுவார். அதன்படி பாலிவுட் தயாரிப்பாளர் சாஹோடன் இணைந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் படத் தயாரிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தை நகைகள், மற்றும் இடங்கள் வாங்குவதில் சாஹோவும், அவரது மனைவி ராதிகா நந்தாவும் ஈடுபட்டு வந்துள்ளது விவேக் ஓபராய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து விவேக் ஓபராய் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். தான் கொடுத்த பணத்தில் ஒரு கோடியே 50 லட்சம் வரை சாஹோ கையாடல் செய்திருப்பதாகவும், அதனால் அவர்மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் மோடிச வழக்கு பதிவு செய்த போலீசார், சாஹோவை கைது செய்தனர். தலைமறைவான சாஹோவின் மனைவியை தேடி வருகிறார்கள்.