ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
கடந்த 2013ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன திரைப்படம் சூது கவ்வும். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் யங் மங் சங் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என கூறுகின்றனர். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 அன்று துவங்குகிறது.