போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‛சூரரைப்போற்று'. சுதா இயக்க கோபிநாத் வேடத்தில் சூர்யா நடித்தார். அவருடன் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். பாராட்டுகளை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளையும் வென்றது. தற்போது இந்த படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீ-மேக் செய்து வருகிறார் சுதா.
இந்த படத்தை அடுத்து தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை தழுவி சுதா படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுபற்றி சுதா கூறுகையில், ‛‛ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. எனது அடுத்த படம் பற்றிய அனைவரின் ஆர்வத்தை காட்டிய அனைவருக்கும் என் நன்றி. விரைவில் அறிவிக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.