படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
ராதே ஷ்யாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார். தனது ஒவ்வொரு பேட்டியிலும் இந்த படம் குறித்து பேசும்போதெல்லாம் பிரபாஸ் மீதான தனது நெருக்கத்தை வெளிப்படையாகவே கூறி வருகிறார் கிர்த்தி சனோன். இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு பேட்டியில், “ஆதிபுருஷ் படப்பிடிப்பின்போது பிரபாஸ் எனக்கு தெலுங்கு டீச்சராக இருந்து தெலுங்கு கற்றுக் கொடுத்தார்.. அவருக்கு நான் ஹிந்தி கற்றுக் கொடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல ஹிந்தியில் கிர்த்தி சனோனுடன் படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ள வருண் தவான் ஒரு பேட்டியில் கூறும்போது, கிர்த்தி சனோன் வாழ்க்கையில் சமீபகாலமாக ஒரு உயரமான இளவரசன் நுழைந்துள்ளார் என கூறியுள்ளார். அந்த இளவரசன் பிரபாஸ் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரபாஸ் குறித்து கிர்த்தி சனோன் சீரியசாக தான் பேசி வருகிறாரோ என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நட்பாகத்தான் பழகி வருகிறோம் என கூறி வருவதால் பிரபாஸின் வாழ்க்கையில் அனுஷ்காவிற்கு இடமில்லை என்கிறபோது அந்த வெற்றிடத்தை கிர்த்தி சனோனாவது நிரப்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.