ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் அருள்நிதி ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள்,. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டவர் கடந்த ஜூன் மாதம் தாய் ஆனார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, அம்மா கடமைகளை முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்கத் தயாராகி விட்டதை அறிவித்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ராமண அவதாரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.