சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தமிழில் ‛வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகள் தவிர அனைத்து படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்களுக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதை மீண்டும் வலியுறுத்தி இப்படம் கண்டிப்பாக 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரைக்கு வந்துவிடும் என்று ஒரு செய்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதோடு அன்றைய தினம் தமிழகத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடப்படும் அதேநாள் தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை என்பதால் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படமும் திரைக்கு வருகிறது. அதனால் விஜய்யின் வாரிசு படமும், பிரபாஸின் ஆதி புருசும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.