பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமா என்றுதான் பெயர், ஆனால், இங்கு எப்போதுமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள்தான் நம்பர் 1 இடத்தில் இருபபார்கள். இப்போது கூட சம்பளத்திலும் சரி, பிரபலத்திலும் சரி கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாராதான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
இருந்தாலும் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில காலம் நம்பர் 1 நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'லேசா லேசா' படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டாலும், த்ரிஷா நடித்து முதலில் வெளிவந்த படம் 'மௌனம் பேசியதே'. அதற்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முக்கியமான முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விக்ரமுடன் நடித்த 'சாமி' படம்தான் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் விஜய்யுடன் நடித்த 'கில்லி' அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த 'அபியும் நானும்' படமும் அவருடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தது.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'ராங்கி' படம் வெளிவர வேண்டும். 'சதுரங்க வேட்டை, கர்ஜனை' உள்ளிட்ட படங்களும் வெளியாக வேண்டும்.
20 வருடங்களாக அனைத்து போட்டிகளையும் சமாளித்து திரையுலகில் வெற்றிநடை போடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 40 வயதைத் தொட்டாலும் இப்போதும் 20 வயதைப் போலவே இருக்கிறார் த்ரிஷா.