ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை பெற்றுள்ளது.
ஹிந்தியில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம், கன்னடத்தில் ரூ.160 கோடி, தெலுங்கில் ரூ.130 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்திலும் ரூ.100 கோடி வசூலைக் கடக்க உள்ளது. ஒரு திரைப்படம் வெளியான ஐந்து மொழிகளில் நான்கு மொழிகளில் 100 கோடி வசூலித்திருப்பது பெரிய விஷயம். வெளிநாடுகளிலும் இப்படம் 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழிகத்தில் 100 கோடி வசூலிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கன்னடப் படத்தை இப்படி ஓட வைக்க வேண்டுமா என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும் மக்கள் விரும்பும் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் என்று இங்குள்ளவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.